Friday 1 July 2011

உம்மைப்போல நல்ல தேவன் யாரும் இல்லையே


உம்மைப்போல நல்ல தேவன் யாரும் இல்லையே
உம்மைப்போல வல்ல தேவன் யாரும் இல்லையே -2

உம்மைப்போல என்னை காத்திட
உம்மைப்போல என்னை தாங்கிட
உம்மைப்போல என்னை தேற்றிட
யாரும் இல்லையே - இயேசைய்யா -2

உம்மை நான் போற்றுகிறேன்
போற்றுகிறேன் போற்றுகிறேன் - என் தெய்வமே

உம்மை நான் போற்றுகிறேன்
வாழ்த்துகிறேன் வனங்குகிறேன் - என் தெய்வமே
என் இயேசுவே

என் தெய்வமே என் இயேசுவே
என் தெய்வமே என் தெய்வமே

இயேசு கிறிஸ்துவின் அன்பு


http://www.youtube.com/watch?v=3ReGWgt0Loc 

இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது -2

உன் மீறுதலுக்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் -2

பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா-2

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்


பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
அல்லேலுயா அல்லேலுயா -2

இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டமென்று கருதுகிறேன்
இயேசு ராஜவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்

எத்தனை தான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக இயேசு நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்

என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே

என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்
நான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்


சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை -2

கேரூபீன்கள் சேராபீன்கள்
பொற்றிடும் எங்கள் பரிசுத்தரே

ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே

ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே

இருபுறமும் கருக்குள்ள
பட்டயத்தை உடையவரே

அக்னிஜூவாலை போன்ற கண்களையும்
வெண்கலப் பாதங்களையும் உடையவரே

பரிசுத்தமும் சத்தியமும்
தாவீதின் திறவுகோல் உடையவரே

எலியாவின் தேவன் நம் தேவன்


எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன் -2
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார் -2

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம் -2

வேண்டிடும் பக்தரின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் -2
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதிப்பார் -2

சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன் -2
அக்கினியால் பதிலளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் -2

தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார் -2
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன் -2

வானங்களை திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன் -2
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள் -2

ஆராதனை நாயகன் நீரே


http://www.youtube.com/watch?v=O253RGvNMcw


ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே -2
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன் -2

ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே -2
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் -2

மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தெய்வம் நீரே -2
முழங்கால் யாவும் முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே -2

முடிவில்லா இராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர் -2
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் -2