Friday 1 July 2011

அனாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா



அனாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா
காருண்யத்தினால் என்னை இழுத்துக் கொண்டீரே
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது

அனாதையாய் அலைந்த என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து காத்து கொண்டீரே - உங்க

தாயின் கருவில் தோன்றும் முன்னே தெரிந்து கொண்டீரே
தாயைப்போல ஆற்றி தேற்றி அரவணைத்தீரே - உங்க

நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கிறேன் ஐயா - உங்க

No comments:

Post a Comment