Saturday 8 June 2013

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு



உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு (2)
என் இயேசையா அல்லேலூயா (2)

இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே (2)
எவ்வேளையும் ஐயா நீர் தானே (2)


என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே (2)
என் எல்லாமே ஐயா நீர் தானே (2)

இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே (2)
எந்நாளுமே ஐயா நீர் தானே (2)

நீரே என் தஞ்சம்



நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை

நீரே என் ரட்சகர்
நீரே ராஜா

நான் உம்மை தேடுவேன் நாள்முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ் நாளெல்லாம்
எனதெல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன் - இயேசுவே

இயேசுவே ராஜா
இயேசுவே தேவா
இயேசுவே மீட்பர்
இயேசுவே
 

நான் உனக்கு துணை நிற்கிறேன்

Youtube Link

நான் உனக்கு துணை நிற்கிறேன்
என்றவரே ஸ்தோத்திரம்
வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரே
வல்ல தேவனே ஸ்தோத்திரம்

பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய் வாழ
துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பி
அரவணைத்தவரே ஸ்தோத்திரம் - நான்

பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான் வாழ
துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
வார்த்தையால் தேற்றி வல்லமையால் நிரப்பி
நடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம் - நான்

சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும் வாழ
துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
அன்பினால் அணைத்து அபிஷேகத்தால் நிரப்பி
ஆதரிப்பவரே என்றும் ஸ்தோத்திரம் -  நான்

ஆராதனை உமக்குத்தான்

http://www.youtube.com/watch?v=Gos6OLgZIpI

ஆராதனை உமக்குத்தான்
அப்பா அப்பா உமக்குத்தான்
எஜமான் நீரிருக்க அடிமை நான் ஆராதிக்க
இரத்தத்தால் கழுவி என்னை
சுத்தமாக மாற்றினீரே - ஆராதனை

சாரோனின் ரோஜாவே
பூத்து குலுங்கும் வாசனையே
உம்மைப்போல் மணம் வீச
யாருண்டு உலகினிலே

சீலோவாம் குளத்தினிலே
கழுவும் போது கண் திறந்தீர்
எப்பத்தா என்று சொல்லி
செவிகளையே திறந்து விட்டீர்

அப்பாவின் பாதத்தில் நான்
அமர்ந்திருந்து பெலனடைந்து
கழுகு போல் சிறகடித்து
உயர உயர பறந்திடுவேன்

அக்கினி அபிஷேகம்
தலைமேல் இறங்கணுமே
தூபமாய் நறுமணமாய்
துதிகளை நான் செலுத்தணுமே

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்


கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே -2

கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
களங்களில் நிரம்பிடும் தானியமும் -2
நிறைவான நன்மை உண்டாக
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2

சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்
வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2

உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
தன் பெயரை உனக்காக வழங்கினாரே -2
சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2

உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் -2
பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2