Saturday 8 June 2013

பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே



பாவங்கள் போக்கவே
சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா
மனிதனை மீட்கவே
பரலோகம் திறக்கவே
சிலுவையை சுமந்தாரைய்யா - 2
கண்ணீரை துடைத்தாரைய்யா
சந்தோஷம் தந்தாரைய்யா -2

எந்தன் இயேசுவே - 4

தங்கத்தை கேட்கவில்லை
வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
ஆஸ்தியை கேட்கவில்லை
அந்தஸ்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா

நான் தேடி போகவில்லை
என்னைத் தேடி வந்தாரைய்யா 2

தாய் உன்னை மறந்தாலும்
தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்

கரம் பிடித்து நடத்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார் 2

No comments:

Post a Comment