Saturday 8 June 2013

நீர் மாத்ரம் போதும்



யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானோம்
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்திப்பீர்

நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு

யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மை போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம் உம் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்திலே


இயெசுவே நீரே என் ஆத்ம நேசர்
என்னில் எவ்வளவன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்

No comments:

Post a Comment