எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே - 2
ஆராதனை உமக்கே - 4
உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச்செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்கு பாத்திரரே
என் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயம் இல்லையே
எந்தன் உயிருள்ள நாளெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நண்மைகளை
எண்ணியே துதித்திடுவேன்
No comments:
Post a Comment