Saturday 8 June 2013

தேவா நான் எதினால் விசேஷித்தவன்

http://www.youtube.com/watch?v=WF1J1jLs59A

தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன் -2
எதினால் இது எதினால் -2
நீர் என்னோடு வருவதினால்

மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அதுபோதும் என் வாழ்விலே - தேவா

பகல் சென்று அந்தகாரம் சூழ்ந்து கொண்டது
பரிசுத்தமான அக்கினி ஸ்தம்பம் சொல்லுது
ஆஹா! என் தேவன் தந்தாரே நல்ல
மங்காத அபிஷேகமே - தேவா

தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது
என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன் - தேவா

வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டுதேவா

No comments:

Post a Comment