Friday 1 July 2011

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது



நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என்று சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன்

எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன்
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன்

மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் போதெல்லாம்
பாதுகாத்தீரைய்யா (தூக்கி எடுத்தீரைய்யா)
மீண்டும் ஜீவனை கொடுத்து நீர் என்னை
வாழ வைத்தீரையா

தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்
அளவில்லா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்

4 comments: